May 20, 2026
Thisaigal NewsYouTube
உள்ளாடைகளுக்குள் குரங்குகளை மறைத்துக் கடத்திய இருவர் கொலம்பியாவில் கைது!
உலகச் செய்திகள்

உள்ளாடைகளுக்குள் குரங்குகளை மறைத்துக் கடத்திய இருவர் கொலம்பியாவில் கைது!

Share:

உள்ளாடைகளுக்குள் மூன்று உயிருள்ள குரங்குகளை மறைத்து வைத்துக் கடத்த முயன்ற இருவர், கொலம்பியாவின் Cartagena சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடைபெற்ற சோதனையின்போது, அந்நாட்டைச் சேர்ந்த 27 வயது பெண் மற்றும் 26 வயது ஆடவர் ஆகிய இருவரின் இந்த நூதனக் கடத்தல் முயற்சி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடத்தலின் போது, உள்ளாடைக்குள் ஏற்பட்ட கடுமையான அழுத்தம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ஒரு குரங்கு பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து மற்ற இரு குரங்குகள்மீட்கப்பட்டுள்ளன.

வனவிலங்கு கடத்தல் மற்றும் விலங்குகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ள அந்த இருவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இந்தச் செயல் விலங்கு உரிமைகளை மீறிய மிகக் கொடூரமான மற்றும் மனிதநேயமற்ற செயல் என்று போலீஸ் தெரிவித்துள்ளார்.

Related News