அக்மால் மீதான விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 06-

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேஹ் ஆற்றிய உரை மற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கை அடுத்த வாரம் சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று போலீஸ் படைத்தலைவர் Tடான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

KK சூப்பர்மார்ட் கடைகளில் அல்லாஹ் என்ற சொல் பொறிக்கப்பட்ட காலுறைகள் கண்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில் அக்மால் ஆற்றிய உரைகள் 1948 ஆம் ஆண்டு நிந்தனை சட்டம் மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடபுத்துறை, பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வந்ததாக ஐஜிபி குறிப்பிட்டார்.

விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக அந்த விசாரணை அறிக்கை தற்போது முறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இன்னும் ஐந்து தினங்களுக்குள் சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்