அணிலைப் பிடிக்க சென்ற ஆடவரை புலி தாக்கியது

பேராக், ஏப்ரல் 04-

பேராக், கெரிக்-கில் தனது நண்பர்களுடன் அணிலை பிடிக்கச் சென்ற பூர்வக்குடியின ஆடவரை புலி ஒன்று திடிரென தாக்கியதில் அவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

நேற்று மாலை மணி 5.30 அளவில், சுங்காய் கெனாரோங் காட்டு பகுதியில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, அவ்வாடவரின் நண்பர்கள் படகில் காத்திருந்த நிலையில், 52 வயதுடைய அந்நபர் மட்டுமே காட்டினுள் சென்றுள்ளார்.

அப்போது திடிரென வந்த புலி அவரை தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயமும் உடலின் பல பகுதிகளில் கீரல்களும் ஏற்பட்டன. புலியிடமிருந்து தப்பித்துக்கொண்ட அவர், தன் நண்பர்கள் இருந்த படகை நோக்கி ஓடி சென்று அதில் ஏறியதுடன் மேல் சிகிச்சைக்காக கெரிக் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்