அந்நபர் மீது 13 குற்றச்சாட்டுகள்

இழப்பீடு பணத்தை கேட்கும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆடவரை போலீசார் கைது செய்தனர்.

41 வயதுடைய அந்த ஆடவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7:43 மணியளவில் Gelugor, Changkat Bukit Gambir 1- வில் வளைத்து பிடிக்கப்பட்டு கைது செய்ததாக கூறப்படுகின்றது.

சந்தேகிக்கும் அந்நபர் மீது ஏற்கனவே 5 குற்றங்கள் உட்பட போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக 8 பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் ACP Razlam Ab Hamid தெரிவித்தார்.

சந்தேகிக்கும் அவ்வாடவர் மீது விடுக்கப்பட்டுள்ள விசாரணை ஆவணங்கள் அனைத்தும் முடிவடைந்த வேளையில் மேல் நடவடிக்கைக்காக அதனை துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்பித்துள்ளதாக Razlam அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 384 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் நாளை வியாழக்கிழமை சந்தேகிக்கும் நபர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்