அ​ந்நிய நாட்டைச் சேர்ந்த 54 பெண்கள் கைது

ஜோகூர்பாரு, மார்ச் 30-

ஜோகூர்பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள கேளிக்கை மையங்களில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் ஒழுங்​கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தே​கிக்கப்படும் 54 அந்நிய நாட்டுப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 19 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய மொத்தம் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

வியட்நாமை சேர்ந்த 48 பெண்கள், இரண்டு ஆண்கள், 3 தாய்லாந்துப் பெண்கள், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஓர் ஆடவர் , ஒரு பெண்,இரண்டு ​சீனப்பிரஜைகள், ​மூன்று நேபாளியப் பிரஜைகள் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹ்ருட்டின் தாஹிர் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்