பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 –
அனைத்தையும் கேட்பதற்கு தாம் தலையாட்டி பொம்மை அல்ல என்பதை மாட்சிமை தங்கி மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நினைவுறுத்தியுள்ளார்.
மக்கள் மற்றும் நாட்டு நலனை பாதுகாப்பதில் மலாய் ஆட்சியாளர்களின் மிகப்பெரிய நம்பிக்கையை தாம் சுமந்து இருப்பதாக மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் 17 ஆவது மாமன்னராக பொறுப்பேற்றப் பின்னர் தமது தேநிலவு காலம் முடிந்து விட்டது. தற்போது நாட்டை வழிநடத்துவதற்கான உன்னதப் பணிகளை நிறைவேற்றும் நிலையில் தாம் இருப்பதாக மாமன்னர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அலங்காரப் பொம்மை தாம் அல்ல என்றும் அமைச்சர்கள் சொல்வதை எல்லாம் கேட்கும் கட்டாயத்தில் தாம் இல்லை என்பதையும் மாமன்னர் நினைவுறுத்தினார்.