தங்கள் கட்சிகளின் வங்கி கணக்கில் பணத்தை குவித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியை குற்றஞ்சாட்டுவதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மிற்கு துணிவு உண்டா? என்று பெர்சத்து கட்சித் தலைவர் முகைதீன் யாசின் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பெர்சத்து கட்சியியில் சேமிக்கப்பட்ட பணத்திற்காக தம்மை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ள SPRM, அதேபோன்ற விசாரணையை பிகேஆர் கட்சியின் வங்கி கணக்கிலும், அம்னோவின் வங்கி கணக்கிலும் புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று முகைதீன் கேட்டுக்கொண்டார்.