முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பது , ஓர் அரசியல் தாக்குதல் என்று கூறப்படும் குற்றச்சாட்டை தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் Fahmi Fadzil மறுத்துள்ளார்.
தனது அரசியல் வைரியான முகைதின் யாசினை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வஞ்சம் தீர்த்துக்கொண்டுள்ளார் என்று கூறப்படுவது தவறான கருத்தாகும். முகைதீனுக்கு எதிராக முறையாக விசாரணை செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் திரட்டப்பட்ட பின்னரே அவர் கடந்த வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார் என்று Fahmi Fadzil விளக்கினார்.