கடந்த மே மாதத்தில், தனது கைப்பேசியிலும் மடிக் கணினியிலும் ஆபாசப் படத்தை வைத்திருந்ததற்காக இணையத்தில் ஆடைகள் விற்பனை செய்து வந்தவருக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் மூவயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் வோங் சாய் சியா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 32 வயதான வோங் யி ஹாங் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், அந்த ஆடவர் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் வோங் சாய் சியா தீர்ப்பளித்தார்.