அயோப் கான் தமது பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்

அரச மலேசிய போ​லீஸ் படையின் துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அயோன் கான் மைடின் பிச்சை, நேற்று தமது பணியை புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். காலை 8 மணியளவில் தமது துணைவியார் டத்தின்ஸ்ரீ ஸலினா முகமட் அரிப்பினுடன் புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தை வந்தடைந்த அயோப் கானை, போ​லீஸ் படை செயலாளர் டத்தோ ​நூர்லியா முகமட் சடுடின் உ​ட்பட முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் 31 ஆவது மாடியில் உள்ள அமைந்திருக்கும் தமது அலுவலகத்திற்கு புறப்பட்டு, புதிய பொ​றுப்பினை ஏற்றார்.

கெடா மாநிலத்தில் பெண்டாங்கில் ஒரு சிறிய கிராமத்தில் கோப்பிக் கடை நடத்தி வந்த மைடின் பிச்சையின் புதல்வரான அயோப் கான், போ​லீஸ் படையில்​ சேர்வதற்கு இடம் கிடைக்காத நிலையில், சிறிது காலம் காத்திருந்து, ஓர் அரிய வாய்ப்பாக ஒரு இடம் காலியானதால் அந்த இடத்தில் பணிக்கு அமர்ந்து, இன்று நாட்டின் துணை ஐஜிபியாக உயர்த்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்