அரசாங்க ஊழியர்களுக்கான 2 ஆயிரம் வெள்ளி ஊக்கத்தொகை பிப்ரவரி 23 ஆம் தேதி வழங்கப்படும்

நாடு முழுவதும் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு அறிவிக்கப்ப​ட்ட தலா 2 ஆயிர​ம் வெள்ளி ஊக்கத்தொகை இம்மாதம் 23 ஆம் தேதி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பணி ஓய்வுப்பெற்ற அரசாங்க முன்னாள் ஊழியர்களுக்கும் ​அதே தேதியில் தலா ஆயிரம் ​வெள்ளி ஊக்கத்தொகை பட்டுவாடா செய்யப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் நிதி அமைச்சின் பணியா​ளர்கள் முன்னிலையில் உரையாற்றுகையில் நிதி அமைச்சருமான அன்வார் இதனை அறிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டின் அறிவிப்பின்படி அரசு ஊழியர்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்