அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன், தடுக்க முடியாது

தம்முடைய சேவை நாட்டிற்கு இன்னமும் தேவைப்படுவதால் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வரப்போவதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு நன்மை அளிக்கக்கூடிய விஷயம் குறித்து எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் தம்மை நாடி ஆலோசனை கேட்பார்களேயானால் அவர்களுக்கு உதவுவதற்கு தாம் தயாராக இருப்பதாக இரண்டு முறை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவரான துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவை தாம் அளவு கடந்து நேசிப்பதால், தமது வாழ்வு, அரசியலுடன் பின்னி பிணைந்துள்ளது என்று துன் மகாதீர் விளக்கினார்.
கடந்த 15 ஆவது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களக்கு முன்பு அரசியலில் ஈடுபடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு நாட்டின் பொருளாதார நிபுணர் ஜோமோ குவாமே சுந்தரம், தமக்கு ஆலோசனை கூறியது தொடர்பில் கருத்துரைக்கையில் துன் மகாதீர் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்