அரச தேநீர் விருந்தில் கலந்து கொண்ட தலைவர்கள்

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர்களான துன் மகாதீர், முகிதீன் யாசின், இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோர், இஸ்தானா நெகாராவில் மாமன்னர் ஏற்பாடு செய்யப்படிருந்த அரச தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 3.00 மணி அளவில் தொடங்கிய அந்த விருந்து நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச தூதர்கள் உட்பட எறத்தாழ இரண்டாயிரத்து 500 பேர் கலந்து கொண்டனர்.

நாட்டின் 16 வது மாமன்னராக அவரது பதவிக்காலம் எதிர்வரு ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைகிற நிலையில், இந்த சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்