பெண்ணின் எலும்புக்கூடும் மீட்பு, மூவர் கைது

கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி முதல் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டுள்ள Mira Sharmila Samsusah அல்லது Bella என்ற பெண்ணுடன் தொடர்புப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் எலும்புக்கூடு, நேற்று மாலையில் ஜோகூர், Batu Pahat- ட்டில் உள்ள கைவிடப்பட்ட காலி வீடொன்றில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரும் வரும் ஜனவரி 27 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றுள்ளனர் என்று Batu Pahat மாவட்ட போலீஸ் தலைவர் Ismail Dollah தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் அந்தப் பெண்ணின் காதலன், அவரின் சிற்றப்பா ஆகியோர் அடங்குவர் என்று Ismail Dollah குறிப்பிட்டார். இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான 32 வயது Bella, தனது காதலனுடன் சலவைக் கடைக்கு செல்வதாக கூறி, காரில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று பத்திரிகை தகவல்கள் கூறுகின்றன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்