ஆசிரியர் உட்பட மூவர் சாலை விபத்தில் பலி

ஜோகூர், கோத்தா திங்கி, ஜாலான் பெசார் ஃபெல்டா அயேர் தவார் 1இல் இரு வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் ஆசிரியர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இன்று காலை விபத்துக்குள்ளான மூவரும் உயிரிழந்ததை சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினார்கள் என கோத்தா திங்கி தீயணைப்பு – மீட்பு நிலையத்தின் தலைவர் முகமது ஷவாலுதீன் அமி நோர்டின் தெரிவித்தார்.

அந்த மூன்று சடலங்களும், அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காக கோத்தா திங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்