ஆடவர் மீது 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன

கடந்த இரண்டு ஆண்டு காலமாக வங்கிகள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவற்றை இலக்காக கொண்டு கொள்ளையடித்து வந்ததாக நம்பப்படும் ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

39 வயது முகமது சுபியான் வஹாப் என்ற அந்த நபர், கத்தி முனையில் ரொக்கப்பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்ததாக கூறி, இரு வெவ்வேறு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டார்.

கத்தியைக் காட்டி 13 கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், கும்பலாக 7 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டன.

நிறுவனம் ஒன்றின் டெக்னிஷனாக வேலை செய்து வந்ததாக கூறப்படும் இந்நபர், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்