மேலும் இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்

காஜாங்கில் உணவு விநியோகிப்பாளரை மோதித் தள்ளியப் பின்னர் தப்பிக்க முற்பட்ட கார் ஓட்டுநரை மடக்கி, பொது மக்கள் சரமாரியாக அடித்து கொன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

23 , 40 வயதுடைய அந்த இரண்டு நபர்கள் நேற்று காஜாங்கில் கைது செய்யப்பட்டனர். இத்துடன் இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 பேர் பேராக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் தொடர்பில் 10 குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாகவும், சிரம்பான் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபரின் மரணத்திற்கான காரணத்தை முடிவு செய்யும் பொறுப்பை மருத்துவமனையிடமே தாங்கள் விட்டு விடுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசைன் ஓமர் இதனை தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அன்றிரவு போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஐவரை கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்