ஆப்கானிஸ்தானுடன் தனது ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கு மலேசியா தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பறிக்கப்படும் ஒரு நாடாக ஜ.நா.வினால் ஆப்பானிஸ்தான் வகைப்படுத்தப்பட்ட போதிலும் அந்நாட்டுடன் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கான மலேசியாவின் நிலைப்பாடு , OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகளுக்கு இடையிலான கூட்டு அமைப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
காபுலுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதில் மலேசியாவிற்கு பிரச்னை இருக்காது. அதேவேளையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் பறிக்கப்பட்ட விவகாரத்தில் மலேசியாவிற்கு உடன்பாடுயில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.