இந்தியர்கள் துணிந்து விட்டனர், ஹம்ஸா ஸைனுடின் கூறுகிறார்

கோலகுபு பாரு, மே 06-

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்றத இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பதென அத்தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்கள் வெளிப்படையாகவே தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர் என்று அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் அறிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்கின்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள 18 விழுக்காடு இந்திய வாக்காளர்கள், பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றியை உறுதி செய்வதற்கு அக்கூட்டணியின் தேர்தல் கேந்திரங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களின் வாயிலாக அவர்களின் நிலைப்பாடு கண்டறியப்பட்டுள்ளதாக ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு அரசாங்கத்தின் கொள்கையை வெளிப்படையாக விமர்சிக்க தொட​ங்கியுள்ள கோலகுபு பாரு தொகுதியை சேர்ந்த இந்திய வாக்காளர்கள், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளனர் என்று ஹம்சா ஜைனுடின் கூறு​கிறார்.

முன்பு, இந்திய வாக்காளர்களை அணுகி, ஆதரவு கேட்கும் போது, வீட்டின் கதவை திறப்பதற்கு Fதயங்கிய இந்திய வாக்காளர்கள், இன்று துணிந்து வெளியே வந்து, தாங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கூறுவதற்கு முனைந்தள்ளனர் என்று இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கண்டறியப்பட்டுள்ளதாக ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்