கோலகுபு பாரு, மே 04-
கோலகுபு பாரு இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியிருக்கும் வேளையில் தாம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இந்திய மற்றும் சீன வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பெரிக்காத்தான் நேஷனலுக்கு செலுத்தும் அளவிற்கு அவர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடியவில்லை என்று அதன் வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சௌத் தெரிவித்துள்ளார்.
இந்த இடைத் தேர்தலில் இந்தியர் மற்றும் சீன வாக்காளர்களின் நிலைப்பாடு என்ன என்பதற்கான தெளிவாக சமிக்ஞை இன்னும் தெரியவில்லை என்று அவர் விளக்கினார். இந்திய , சீன வாக்காளர்களின் ஆதரவு தமக்கு கணிசமாக அளவில் கிடைத்தால் மட்டுமே தனது வெற்றியை உறுதி செய்ய முடியும் என்ற நிலை இருக்கும் பட்சத்தில் தேர்தல் பிரச்சாரம் கடந்த ஒரு வாரமாக முடுக்கிவிடப்பட்டதில் அந்த இரு சமூகத்தினரிடமிருந்து வெளிப்படையிலான ஆதரவு தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதை பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சௌத் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும் மக்களின் வாழ்க்கை செலவின உயர்வை மேற்கோள்காட்டி சீன, இந்திய வாக்காளர்களின் ஆதரவை தாம் பெற முடியும் என்று அவர் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.