இன்னமும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்

கோலாலம்பூர், மார்ச் 8 –

மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான MH 370 விமானம் 239 பேருடன் காணாமல் போன துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்று மார்ச் 8 ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவு அடையும் நிலையில் அந்த விமானத்தில் பயணத்தவர்களின் நிலை குறித்து இன்னமும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட MH 370 விமானம் குறித்து விடை காண முடியும் என்று உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற MH 370 விமானப் பயணிகளுக்கான சிறப்பு பிரார்த்தனைக்கூட்டத்தில், பங்கேற்ற உறவினர்கள், தாங்கள் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.

என் மகன் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்புகிறேன். அவர் விரைவில் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தனது மகனை பறிகொடுத்தவரான Li Shuce நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்