லைசென்ஸ்யின்றி வாகனத்தை செலுத்தியது, பாதுகாப்பு வார்ப்பட்டையை அணியாதது ஆகிய குற்றங்களுக்காக சம்மன் கொடுக்கப்பட்ட போது, அதனை தவிர்க்க போலீசாரிடம் வலுக்கட்டாயமாக கையூட்டைத் திணிக்க முற்பட்ட இரு பெண்கள் கைது செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Mohamad Hatta Che Din தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரு இந்தோனேசியப் பெண்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பெண்களிடம் மூன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அந்த உத்தரவை பொருட்படுத்தாமல் அவர்கள் கையூட்டை திணிக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக ACP Mohamad Hatta குறிப்பிட்டார்.