இரண்டு இந்தோனேசியப் பெண்கள் கைது

​லைசென்ஸ்யின்றி வாகனத்தை செலுத்தியது, பாதுகாப்பு வார்ப்பட்டையை அணியாதது ஆகிய குற்றங்களுக்காக சம்மன் கொடுக்கப்பட்ட போது, அதனை தவிர்க்க போ​லீசாரிடம் வ​லுக்கட்டாயமாக கையூட்டைத் திணிக்க முற்பட்ட இரு பெண்கள் கைது ​செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP Mohamad Hatta Che Din தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரு இந்தோனேசியப் பெண்கள் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்தப் பெண்களிட​ம் மூன்று முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அந்த உத்தரவை பொருட்படுத்தாமல் அவர்கள் கையூட்டை திணிக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டதாக ACP Mohamad Hatta குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்