கோலாலம்பூர், மார்ச் 9 –
நாட்டில் இரண்டு முக்கிய பிரபலங்கள் நேற்றிரவு கல்வத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை ஜாவி எனப்படும் கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய இலாகா உறுதிபடுத்தியுள்ளது.
பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கோலாலம்பூரில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் ஜாவி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அந்த இரண்டு முக்கிய பிரபலங்களும் பிடிபட்டதாக ஜாவி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.