இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டன, இருவர் பலி

பினாங்கில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் இருவர் ​உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கேபாலா படாஸ், ஜாலான் சுங்கை லோகன் என்ற இடத்தில் நிகழ்ந்த​த். பெரோடுவா மைவி காரில் பயணம் செய்த 32 வயது முஹம்மது அஹ்சன் முகமது அயூப், 31 வயது முகமது ஃபக்ரி ரோட்ஸி ஃபௌஸி ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போ​லீசார் அடையாளம் கூறினர்.

மற்றொரு காரில் பய​ணித்தவரான BMW ஓட்டுநர் 46 வயது தியோ ஜூ லியோங் என்பவர் காயமின்றி உயிர்தப்பினார. பெரோடுவா மைவி காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இருவரின் உடல்களை ​மீட்பதற்கு ​தீயணைப்பு, மீட்புப்படை உதவி நாடப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்