பினாங்கில் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் கேபாலா படாஸ், ஜாலான் சுங்கை லோகன் என்ற இடத்தில் நிகழ்ந்தத். பெரோடுவா மைவி காரில் பயணம் செய்த 32 வயது முஹம்மது அஹ்சன் முகமது அயூப், 31 வயது முகமது ஃபக்ரி ரோட்ஸி ஃபௌஸி ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.
மற்றொரு காரில் பயணித்தவரான BMW ஓட்டுநர் 46 வயது தியோ ஜூ லியோங் என்பவர் காயமின்றி உயிர்தப்பினார. பெரோடுவா மைவி காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட இருவரின் உடல்களை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படை உதவி நாடப்பட்டது.