இருவரின் சவப்பரிசோதனை இன்று நிறைவடையும்

காப்பார், 12 ஆவது மைல், Kampung Tok Muda – வில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் சவப்பரிசோதனை இன்று புதன்கிழமை நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று காலை Tengku Ampuan Rahimah மருத்துவமனையில் சவப்பரிசோதனை மேற்கொள்வதற்காக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் DNA மாதிரிகளையும் அளித்துள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

இவ்விபத்தில் பலியானவர்களின் சவப்பரிசோதனை இன்று முடிவடைவதுடன் அவர்களின் உடல்கள் இறுதிச் சடங்கிற்காக குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும் என்று Hussein Omar குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் 30 வயதுடைய Daniel Yee Hsiang Khoon, 42 வயதுடைய Roshaan Singh Raina ஆகியோர் உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்