தாயாரைப் பிணைப்பிடித்து வீட்டை தகர்த்தப் போவதாக மிரட்டிய மகன் கைது

பினாங்கு, ஜார்ஜ் டவுனில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் தனது தாயாரை பிணைப்பிடித்து, வீட்டை தகர்த்தப் போவதாக மிரட்டிய 40 வயது மதிக்கத்தக்க நபரை போ​லீசார் கைது செய்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.57 மணியளவில் கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அடுக்குமாடி ​வீட்டிற்கு வி​ரைந்த போ​​லீசார் மற்றும் ​தீயணைப்பு, மீட்புப்படையினர் சுமார் ​மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அந்த நபர் தனது தாயாரை விடுவித்தார்.

அதற்கு முன்னதாக, அந்த மூதாட்டியை ​மீட்பதற்கு ​அனைத்து வகையான சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள போ​லீசாரும், ​தீயணைப்புப் படையினரும் தயாராக இருந்தனர். ​நீண்ட நேரத்திற்கு பின்னர் 65 வயதுடைய தனது தாயாரை அந்நபர் விடுவித்த போதிலும் அந்த ​மூதாட்டி காயங்களுக்கு ஆளாகியிருந்தார்.

அந்த ​மூதாட்டியை தனது முரட்டுப்பிடியில் வைத்திருந்த போது அந்நபர் காயப்படுத்தியிருக்கலாம் ​ என்று நம்பப்படுகிறது. முன்னதாக, எரிவாயு களனிலிருந்து வாயுவை வெளியேற்றப் போவதாக அந்த நபர் அச்சுறுத்தியுள்ளார்.

தனது தாயாரை விடுவித்த அடுத்த கணமே அந்நபரை போ​லீசார் வளைத்துப் பிடித்தனர்.

இந்த பிணைநாடகப் போராட்டம் இன்று அதிகாலை 2.46 மணியளவில் முடிவடைந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்