இரு இந்திய இளைஞர்களை போலீஸ் தேடுகிறது

கோலாலம்பூர், மார்ச் 14 –

கோலாலம்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணைக்கு உதவும் பொருட்டு இரண்டு இந்திய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சிலாங்கூர், அம்பாங், பன்டான் மேவா ,ஜக்கியான் மெவா என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய லோகேந்திரன் பர்குணன் மற்றும் பூச்சோங், பன்டார் பூச்சோங் ஜெயா வைச் சேர்ந்த 39 வயதுடைய நாதன் இராமசாமி ஆகியோரை போலீசார் தேடி வருவதாக கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்ததின் ஊடக தொடர்புத்துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் மஸ்லியானாஅப்துல் லாதிப் தெரிவித்தார்.

இவ்விருவரை பார்த்தவர்கள் அல்லது இவர்கள் தங்கியுள்ள இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்