கோலாலம்பூர், ஏப்ரல் 08-
நோன்பு பெருநாளை முன்னிட்டு, இன்று முதல் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் இலவச டோல் கட்டணம் அளிக்கப்பட்டிருக்கும் வேளையில் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை 8 மணி வரையில் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக இருப்பதாகவும் மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
கிழக்கு கரையோர நெடுஞ்சாலை 1 மற்றும் 2 ஆகிய இடங்களில் இதுவரையில் வாகனங்கள் சீராக நகர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
கோலாலம்பூரிலிருந்து காராக் – கை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கென்த்திங் செம்ப்பாஹ் தன்னெல் – லிற்கு முன் வாகனங்கள் மெதுவாக செல்வதாக செய்தி தொடர்பாளர் மேலும் அறிவித்தார்.