ஷா ஆலாம், டெனாய் அலாம்அருகே வேலை முடிந்து ன்வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்டது. அந்த விவகாரம் தொடர்பில் 12 பேரிடம் இருந்து போலீஸ் சாட்சியம் பதிவு செய்துள்ளது.
கடந்த நவம்பர் 8 ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்து வருவதாகவும், இதன் பின்னணியில் இருக்கும் நோக்கம் குறித்து இன்னும் தெளிவான முடிவு கிடைக்கப்பட வில்லை எனவும் ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தன் கமிஷனர் முகமது இக்பால் இப்ராகிம் கூறினார்.
இக்குற்றத்தில் ஈடுபட்ட நபரை காவல் துறை விசாரணையின் வழி தேடி வருவதாகவும் முகமது இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.