பாலஸ்தீன மக்கள் அடைக்கலம் புகுந்துள்ள காஸாவின் தென் பகுதியான Rafah- வில் பெரியளவிலான தாக்குதலை மேற்கொண்டு இருக்கும் இஸ்ரேலுக்கு மலேசியா கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை மலேசியா கண்டிக்கிறது என்று வெளியுறசு அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் ஆகக்கடைசியான இந்த தாக்குதல் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி மேலும் மோசமடைய வழிவகுத்துள்ளது என்பதுடன் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை பாதிக்கச் செய்துள்ளது என்று மலேசியா குறிப்பிட்டுள்ளது.