பெத்தாலிங் ஜெயா,பிப்.12
ஜோகூர் மாநிலத்தில் கேளிக்கை மையங்கள், Spa, பாதம் நீவுதல், உடம்பு பிடி, Karaoke முதலிய வர்த்தகங்களுக்கு பிரத்தியேக ஓர் இடத்தை ஒதுக்கித் தருவதற்கு மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. மக்களின் வீடமைப்புப்பகுதியிலிருந்து ஓர் ஒதுக்குப்புறமான பகுதியில் இத்தகைய வர்ததகங்கள் செயல்படவும், அவற்றின் நடவடிக்கைகளை அணுக்கமாக கண்காணிக்கவும் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமாட் ஜஃப்னி முஹமாட் ஷுக்கோர் தெரிவித்துள்ளார்.
இது போன்ற இன்னிசை மையங்கள் மற்றும் மனமகிழ்வு நடவடிக்கைகள் பிரத்தியேக மண்டலத்தில் செயல்பட வேண்டும் என்று பொது மக்களிடமிருந்து நிறைய கோரிக்கைகள் வந்த வண்ணம் இருப்பதால் இந்த உத்தேசத் திட்டம் தற்போத ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.