உதவிப் பொருட்களை அனுப்ப சேகரிப்பு மையத்தைத் திறந்த அமானா கட்சி
கிளாந்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களையும் அடிப்படை வசதிக்கானப் பொருட்களையும் திரட்டும் மையத்தைத் திறந்துள்ள அமானா கட்சி.
24 மணி நேரமும் செயல்பட்டு வரும் அந்த மையம் குறித்து தகவல் வெளியிட்ட அக்கட்சியின் இளைஞர் அணி குறிப்பிடுகயில், பெண்களின் அணியாடை, குழந்தைகளுக்கான பெம்பர்ஸ், தண்ணீர். போர்வை, உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து வருவதாக அதன் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், அடிப்படை உணவுப் பொருட்கள் 500 பொட்டலங்களை மைதின் நிறுவனம் வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.