எல்.ஆர்.தி 3 ஶ்ரீ அன்டலாஸ் ரயில் நிலையத்தில் பெண்ணின் சடலம்

கிள்ளான், எல்.ஆர்.தி 3 ஶ்ரீ அன்டலாஸ் ரயில் நிலையத்தின் பாதசாரிகளுக்கான நடைப்பாடையில் பெண் ஒருவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.10 மணியளவில் அந்த ரயில் நடைப்பாதையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாவலரிடமிருந்த கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து போலீஸ் குழு அவ்விடத்திற்கு விரைந்ததாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சி ஹூங்கா போங் தெரிவித்தார்.

47 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், வீடுயின்றி அப்பகுதியில் சுற்றித் திரிபவர் என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது. சவப்பரிசோதனைக்காக அம்மாதுவின் சடலம், கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ஏசிபி சி ஹூங்கா போங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்