இதற்கு முன்பு அமைந்த இரண்டு அரசாங்கங்கள், தங்களது நிர்வாகங்களை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்திக்கொள்வதற்கு தேவையான விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு 70 கோடி வெள்ளி செலவிட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைமான எஸ்பிஆர்எம் விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தொடபுத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையில் தங்கள் அமைச்சு உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுமானால் உரிய ஒத்துழைப்பு நல்கப்படும் என்று ஃபாஹ்மி ஃபாட்ஸில் அறிவித்துள்ளார்.