எஸ்.பி.எம் மாணவர்கள் கடும் காயத்திற்கு ஆளாகினர்

எஸ்.பி.எம் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்த இரண்டு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்களும் படுகாயத்திற்கு ஆளாகினர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.53 மணியளவில் ஜோகூர், குளுவாங், காஹாங் தேசிய இடைநிலைப்பள்ளி அருகில் நிகழ்ந்தது என்று மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

இந்த விபத்தில் Modenas Kriss மோட்டா​ர் சைக்கிளும், Naza Ria காரும் சம்பந்தப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

SMK Kahang இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 18 வயதுடைய அவ்விரு மாணவர்களும் Jalan Batu Pahat – Mersing சாலையில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார். கடும் காயங்களுக்கு ஆளான அவ்விரு மாணவர்களும் குளுவாங், Enche’ Besar Hajah Khalsom மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்