கோலாலம்பூர், மார்ச் 8 –
போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் மற்றும் இஸ்தானா நெகாராவில் சேவையாற்றும் முதிர் நிலை அதிகாரிகளுக்கு மாட்சிமைத் தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் , தமது அன்பளிப்பாக போரோத்தோன் X90 ரக வாகனங்களை வழங்கினார்.
அவர்களின் சீரிய சேவை மற்றும் அளப்பரிய பங்களிப்பை அங்கீரிக்கும் வகையில் மாமன்னர் அந்த வானங்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
ஐஜிபி தான் ஶ்ரீ ராசாருடின் க்கு அப்பாற்பட்ட நிலையில் இஸ்தானா நெகாராவின் டதுக் படுக்கா மஹாராஜா லேலா அசுவான் இபன்டி சைரகித்னைனி மற்றும் இஸ்தானா நெகாராவின் சமய அதிகாரி முனிர் முகமாட் சாலெ ஆகியோர் போரோத்தோன் X90 ரக வாகனங்களை மாமன்னரிடமிருந்து பெற்றுக்கொண்ட இதர முக்கிய சேவகர்கள் ஆவார்.