மலேசிய மாடானி பச்சரிசி எனும் ஒரே வகையான அரிசியை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கவில்லை என்று விவசாயத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு இன்று விளக்கம் அளித்துள்ளார்.
முக்கிய அத்திவாசியப்பொருளான அரிசி தொடர்பில் அரசங்கம் எந்தவொரு முடிவு எடுத்தாலும் அது 1994 ஆம் ஆண்டு நெல், அரிசி கட்டுபாடு சட்டத்தின் கீழ் அமையும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது சந்தையில் இருந்து வரும் உள்நாட்டு பச்சரிசி மற்றும் இறக்குமதி பச்சரிசி ஆகியவை அகற்றப்பட்டு, மலேசிய மடானி பச்சரிசி எனும் ஒரே வகையான பச்சரிசியை வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி திங்கட்கிழமை அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக வெளியான தகவல் தொடர்பில் மொத்த வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நிலவிவரும் மாறுப்பட்ட கருத்துக்களை தொடர்ந்து அமைச்சர் முகமட்சாபு இவ்விளக்கத்தை தந்துள்ளார்.