ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு மலேசியாவிற்கு வாய்ப்பு

கோலாலம்பூர், மார்ச் 11 –

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதற்கு மலேசியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதிலிருந்து ஆஸ்திரேலியா, விக்டோரியா, கடந்த ஆண்டு பின்வாங்கியதைத் தொடர்ந்து கடந்த 1998 ஆம் ஆண்டு மிகச்சிறப்பான முறையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்திய உபசரணை மாநகரான கோலாலம்பூருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை மலேசியா ஏற்று நடத்த வேண்டுமானால் குறைந்த பட்சம் 60 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவாகும் என்று மலேசிய ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த அனைத்துலக விளையாட்டப் போட்டியை ஏற்று நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து அமைச்சரவையை பொறுத்தது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர ஹானா யியோ அறிவித்துள்ள வேளையில் காமன்வெல்த் விளையாட்டு மன்றமான CGF, மலேசியாவிற்கான இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக மலேசிய ஒலிம்பிக் மன்றம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்