உள்துறை அமைச்சராக தாம் பதவி வகித்த போது, சில தனி நபர்கள் லஞ்சம் பெற்றது தொடர்பான கோப்புகளை தாமும் கொண்டுள்ளதாகவும் , அவற்றை தம்மாலும் அம்பலப்படுத்த முடியும் என்ற சவால் விடுத்துள்ள பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுதீன், ஓசா ( OSA) சட்டத்தின் கீழ் பிடிபடுவார் என்று சட்ட வல்லுநரும், பாசீர் கூடாங் எம்.பி.யுமான Hassan Karim எச்சரித்துள்ளார்.
அரசாங்க விவகாரங்களை அம்பலப்படுத்த மாட்டோம் என்று ரகசிய காப்புச் சட்டமான ஓசாவின் கீழ் பதவி பிரமாணம் எடுத்தப் பின்னரே ஒருவர் அமைச்சர் பொறுப்பை ஏற்கிறார். ஆனால், அமைச்சர் பதவி இல்லாத போது, தாம் பதவி வகித்த காலத்தில் கண்டறிந்த அரசாங்கம் தொடர்புடைய விவகாரங்களை பகிரங்கமாக அம்பலப்படுத்துவது என்பது ரகசிய காப்புச் சட்டமான ஓசாவின் கீழ் பெரும் குற்றமாகும், நிந்தனைக்குரியது, என்பதை அந்த முன்னாள் உள்துறை அமைச்சருக்கு நினைவூட்ட தாம் விரும்புவதாக ஒரு வழக்கறிஞருமான Hassan Karim எச்சரித்துள்ளார்.