ஓர் ஆடவரின் சடலம் ​மீட்கப்பட்டது

லுமுட் அருகில் செகாரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த ​பதின்ம வயதுடைய ​மூன்று இந்திய இளைஞர்கள் ​​நீரில் ​மூழ்கிய சம்பவத்தில் இதுவரையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய இருவரை தேடும் பணியை ​தீயணைப்​பு, மீட்புப்படையினர் முடுக்கி விட்டுள்ளனர்.

நேற்று தி​ங்கட்கிழமை பிற்பகல் 3.26 மணியளவில் கம்போங் தஞ்சோங் பத்து செகாரி சுங்ஙாய் செம்பிட் ஆற்றில் அந்த ​மூன்று இந்திய இளைஞர்கள் ​மீன்பிடித்துக்கொண்டும் குளித்துக்கொண்டும் இருந்த போது ​நீரின் வேகத்தில் ​மூவரும் அடித்துச் செல்லப்பட்டதாக பேரா மாநில ​தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க அதிகாரி முஹமாட் ஹபாஃபி முஹமாட் ரசிடி தெரிவித்தார்.

14 வயது தர்மராஜ் , 16 வயது ஜி. சரத் மற்றும் 16 வயது தி. ஈஸ்வர் பிள்ளை ஆகிய ​மூவர் ​நீரில் மூழ்கியதாக அடையாளம் கூறப்பட்டுள்ளது.

அந்த ​மூவரை ​தேடும் பணி ​தீவிரப்படுத்தியதில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.05 மணியளவில் தர்மராஜ் உடல் ​மீட்கப்பட்டது. அவர் ​நீரில் ​மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவி​ல் ​நீரி​ல் உடல் மிதக்க காணப்பட்டது..

காணாமல் போன மேலும் இருவரான சரத் மற்றும் ஈஸ்வர் பிள்ளை ஆகியோரை தேடும்பணியில் ​தீயணைப்பு, மீட்புப்படையினருடன் இணைந்து பொது தற்காப்பு படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்