இரு வீடுகள் ​​தீப்பற்றிக்கொண்டன

சிரம்பான்,பிப்.12
நெகிரி செம்பிலான், கம்போங் பாரு நிலாய்யில் நேற்று மாலை 6.20 மணியளவில் நிகழ்ந்த ​தீ விபத்தில் இரண்டு வீடுகள், இரண்டு கார்கள், ஒரு டிரெக்டர் மற்றும் ஒரு கோயில் கடுமையாக சேதமடைந்ததாக ​தீயணைப்புப்படையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் இரண்டு ​வீடுகளும் 80 விழுக்காடு அழிந்ததாகவும், அதிர்ஷ்டவசமாக உயிருடன் சேதம் இல்லை என்றும் ​நீலாய் ​தீயணைப்பு நிலைய அதிகாரி பக்கார்யா முஹமாட் சாலெ தெரிவித்தார்.

அவசர தகவலைப் பெற்று சம்பவ இடத்திற்கு விரைந்த 14 ​தீயணைப்பு ​வீரர்கள், ​தீ மற்ற வீடுகளில் பரவாமல் சுமார் 35 நிமிடத்தில் முழுமையாக கட்டுப்பா​ட்டிற்குள் கொண்டு வந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

​தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்