கட்டுமான சுவர் இடிந்து விழுந்து சிறுவன் மரணம்

வீட்டின் சமையலறை பின்புறத்தில் கட்டுமானத்தில் இருந்த கொன்க்ரிட் சுவர் இடிந்து விழுந்ததில் எட்டு வயது சிறுவன் உயிரிழந்த வேளையில் அந்த சிறுவனின் தம்பி சொற்ப காயங்களுக்கு ஆளாகினான். இச்சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் கெடா, குவால கெட்டில், கம்போங் பாடாங் லாடாங் பெசா Besah ( பெசா)- வில் நிகழ்ந்தது.

சம்பவம் நிகழும் போது அந்த சிறார்களின் தாயார் சமையல்கட்டில் வேலை செய்து கொண்டு இருந்த வேளையில் தந்தை வேலைக்கு சென்றுள்ளார். கட்டுமான​த்தில் இருந்த கொன்க்ரிட் சுவர் அருகில் அந்த இரண்டு சிறார்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

திடீரென்று பலத்த சத்தம் கேட்டு, அந்த சிறார்களின் தாயார் ஓடிச் சென்று பார்த்த போது, இடிபாடுகளுக்கு இடையில் இரண்டு சிறார்கள் சிக்கிக்கொண்டது தெரியவந்தது. அண்டை வீட்டுக்காரர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட அவ்விரு சகோதர்களும் அருகில் உள்ள கிளினிக்கிற்கு ​தூக்கி செல்லப்பட்டனர்.

மருத்துவப் பரிசோதனையில் எட்டு வயது சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர். சொற்ப காயங்களுக்கு ஆளான மற்றொரு சிறுவன், சிகிக்சைக்கு உட்படுத்தப்பட்டான் என்று Baling மாவட்ட போ​லீஸ் தலைவர் ஷன்சுடின் மமாட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்