காசாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் மரணமடைந்த முன்னாள் மாணவர்களுக்கும் புகழ்பெற்ற கவிஞர் டாக்டர் ரிஃபாட் அலரீர் -க்கும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் யூ.பி.எம் இறுதி அஞ்சலி செலுத்தியது.
இணை பேராசிரியர் டாக்டர் நோரிதா ஓமார் – ரின் மேற்பார்வையின் கீழ் டாக்டர் ரிஃபாட் முதுக்கலை செய்து வருவதாக முன்னாள் மாணவர்களின் முகநூல் அகப்பக்கத்தில் தெரியவந்துள்ளது. யூ.பி.எம் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், காசாவில் தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களையும் தன் குடும்பத்தினரோடு சேர்ந்து தாமும் குண்டுவெடிப்புக்கு பலியாகிவிட்டதாகவும் டாக்டர் ரிஃபாட் தெரிவித்திருக்கிறார்.
டாக்டர் ரிஃபாட் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திப்போம் என்று யூ.பி.எம் முன்னாள் மாணவர்கள் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தனர்.