சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்க்கேசோவின் இணையப்பம் சில பொறுப்பற்றத் தரப்பினரால் இணையத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. கடந்த சனிக்கிழமை முதல் இந்த விவகாரம் நடந்து வந்தாலும் தகபல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்து வருகிறது என அந்த அரசு சார்ந்த நிறுவனம் தெரிவித்தது.
இலாப ஈவு, இழப்பீடு, ஓய்வூதியம், வாரிசுகளுக்கான இழப்பீடு என அனைத்தும் முடிவு செய்யப்பட்ட காலக்கெடுவின்படி பகிர்ந்தளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்தது.
இணையத் தாக்குதல் ஏற்பட்ட நாளில் இருந்து தற்போது அவரை பெர்க்கேச்சொவின் தொழில்நுட்பப் பிரிவு சீரிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இது பெர்க்கேசோவுக்கு நடக்கும் முதல் இணையத் தாக்குதல் கிடையாது என்ற நிலையில், பொது மக்கள் யாரும் தகவல் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ள வேண்டாம் என அந்த நிறுவனம் கூறியது.