காணாமல் போன நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்

பகாங், கோலா ரொம்பின் -னில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்பட்ட வேலையில்லா நபர் ஒருவர் மற்றொரு மாநிலத்தில் அமலாக்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜொகூரில் உள்ள அமலாக்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 வயது அந்நபரை குறித்து நேற்று ரொம்பின் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்க பெற்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் நோர் அஸ்மான் யூசோப் கூறினார்.

அந்நபர் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதுடன் போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்கு அமலாக்க பிரிவினர் அவரை கைது செய்துள்ளதாக நோர் அஸ்மான் விவரித்தார்.

அவ்வாடவர் கைது செய்யப்படுவதற்கு என்ன காரணம் மற்றும் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஜொகூர் சென்றாரா இல்லையா என்பது குறித்து தெளிவாக எதுவும் தெரியவில்லை என்று அந்நபரின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்ததாக நோர் அஸ்மான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்