கான்கிரீட் சுவரில் மோதி ஆடவர் மரணம்

ஜெரந்துட், மார்ச் 15 –

ஜெராந்துட் பெல்டா கோத்தா கெலாங்கி சத்து வில் உள்ள ஒரு காலி வீட்டின் காங்கிரீட் சுவரில் மோதி ஆடவர் உயிரிழந்தார்.

கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில் பாதிக்கப்பட்ட 41 வயதுடைய மொகமாட் அஸ்ரி அசாம் காலியாக இருந்த வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது கான்கிரீட் சுவரில் மோதி உயிரிழந்ததாக நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட ஆடவரின் உடல் அந்த வீட்டின் தரையில் இருந்த வேளையில் தலை சுவரில் மோதி நசுக்கப்ப‌ட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஜெராந்துட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அஸ்மான் மாட் காமிஸ் கூறினார்.

சவப் பரிசோதனைக்காக அவ்வாடவரின் உடல் ஜெராந்துட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் இது திடீர் மரணமே என்றுஅஸ்மான் மாட் நேற்று தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்