காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, அமைச்சரவை முடிவு எடுக்கும்

காஜாங், மார்ச் 9 –

வரும் 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதற்கு மலேசியா ஆர்வம் கொண்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர ஹனா யியோ தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவது தொடர்பில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஆய்வறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இளைஞர், விளையாட்டுத்றை அமைச்சு தயாரித்து வருவதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை மலேசியா ஏற்று நடத்தும் என்று இப்போதைக்கு தம்மால் எந்த கருத்தும் வெளியிட முடியாது என்று குறிப்பிட்ட ஹன்னா, அமைச்சரவை எடுக்கக்கூடிய முடிவே தீர்க்கமானதாகும் என்றார்.

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கு நிதி பலம் மட்டுமின்றி வேறு சில அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியா ஆகக்கடைசியாக கடந்த 1998 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் மறைந்த முன்னாள் பிரிட்டிஷ் அரசியார் எலிசபெத் கலந்து சிறப்பித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்