முன்னாள் ஐஜிபிக்கு உயரிய விருது

சிங்கப்பூர், மார்ச் 9 –

மலேசிய போலீஸ் படையின் முன்னள் தலைவர் தான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா விற்கு சிங்கப்பூரில், Distinguished Service Order எனும் உயரிய விருது வழங்கப்பட்டுளள்து. இந்த உயரிய விருதை சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகம் கடந்த வியாழக்கிழமை வழங்கி தான் ஶ்ரீ அக்ரில் சானி வை கெளரவித்துள்ளார்.

மலேசியாவின் காவல் துறை தலைமைப் பொறுப்பை வகித்த போது, தான் ஶ்ரீ அக்ரில் சானி, மலேசியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையே அணுக்கமான உறவை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று புகழாரம் சூட்டப்பட்டது.

குறிப்பாக, பயங்கராவதம், போதைப்பொருள் கடத்தல் கும்பல், நாடு கடந்த குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் அண்டை நாடான சிங்கப்பூருடன் இணைந்து தான் ஶ்ரீ அக்ரில் சானி முக்கிய பங்காற்றியிருப்பதை கருத்தில் கொண்டு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்