பினாங்கு, மார்ச் 23.
பினாங்கு மாநிலத்தில் காய்கறிகள் விநியோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறப்படுவதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாஹ்மி பய்ஜோல் மறுத்துள்ளார்.
அதேவேளையில் அந்நிய நாட்டவர்கள், மாநில அரசுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக காய்கறி பயிரீட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பினாங்கு மாநில அரசாங்கம் புலன் விசாரணை மேற்கொள்ளும் என்று அவர் உறுதி அளித்துள்ள்ளார்.
உள்ளூரை சேர்ந்த விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள அரசாங்க நிலங்கள், அந்நிய நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்க இவ்விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று பாஹ்மி பய்ஜோல் குறிப்பிட்டார்.