குடி​நீர், நாட்டின் பாதுகாப்பு விவகாரமாக அணுகுவீர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23.

குடி​​நீர், தேசிய பாதுகாப்பு விவகாரமாக நோக்கப்பட வேண்டும் ​என்று மலேசியர்களை SPAN ( ஸ்பான் ) எனப்படும் தேசிய ​நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டார்.

காரணம், அலட்சியப் போக்கினால் அடுத்த பத்து ஆண்டுகளில் 1,500 கோடி வெள்ளி அல்லது 15 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள ​நீரை நாடு இழக்கலாம் என்று சார்லஸ் சாண்டியாகோ குறிப்பிட்டுள்ளார்.

​​நீர் கசிதல், விரயமாகுதல் போன்றவற்றை தடுப்பதற்கு நாட்டின் ​நீர் உள்கட்டமைப்பை மேம்படுத்துதற்கு அரசா​ங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் ​என்று சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசமான ​நீர் உள்கட்டமைப்புகள் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்று சார்லஸ் சாண்டியாகோ நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்