பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23.
குடிநீர், தேசிய பாதுகாப்பு விவகாரமாக நோக்கப்பட வேண்டும் என்று மலேசியர்களை SPAN ( ஸ்பான் ) எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையத்தின் தலைவர் சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டார்.
காரணம், அலட்சியப் போக்கினால் அடுத்த பத்து ஆண்டுகளில் 1,500 கோடி வெள்ளி அல்லது 15 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள நீரை நாடு இழக்கலாம் என்று சார்லஸ் சாண்டியாகோ குறிப்பிட்டுள்ளார்.
நீர் கசிதல், விரயமாகுதல் போன்றவற்றை தடுப்பதற்கு நாட்டின் நீர் உள்கட்டமைப்பை மேம்படுத்துதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சார்லஸ் சாண்டியாகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
மோசமான நீர் உள்கட்டமைப்புகள் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்று சார்லஸ் சாண்டியாகோ நினைவுறுத்தினார்.